Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒரு பைசா கூட வழங்கவில்லை: சி.பி.ஐ., மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒரு பைசா கூட வழங்கவில்லை: சி.பி.ஐ., மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒரு பைசா கூட வழங்கவில்லை: சி.பி.ஐ., மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒரு பைசா கூட வழங்கவில்லை: சி.பி.ஐ., மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

ADDED : ஜன 08, 2024 05:30 AM


Google News
திண்டுக்கல் : ''மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒரு பைசா கூட வழங்கவில்லை,'' என, திண்டுக்கல்லில் சி.பி.ஐ., மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.

அவர் கூறியதாவது: தமிழக அரசுக்கு மிகவும் கடுமையான நிதி நெருக்கடி இருக்கிறது.

மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை கொடுக்க மறுக்கிறது. வஞ்சம், பழி தீர்க்கிறது என்றே கூற வேண்டும். தமிழகத்தில் மழை, வெள்ளம் உள்ளிட்டவற்றால் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு கோடி மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரணப்பணிகளுக்காக ரூ.39 லட்சம் கோடி தேவை என முதல்வர் ஸ்டாலின் நேரில் பிரதமர் மோடியிடம் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு பைசா கூட மத்திய அரசு வழங்கவில்லை. மாநில அரசின் நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது.

மெட்ரோ 2 ம் கட்ட பணியை தொடங்கி வைத்தவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதற்கு செலவாகும் மொத்த தொகையில் சரிபாதி மாநில அரசும்,மத்திய அரசும் வழங்க வேண்டும்.

பல்வேறு நெருக்கடிகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு பொறுப்புடன் செயல்படுகிறது. நிதி நெருக்கடிக்கு மத்தியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்குகிறது.

தமிழகத்தை புறக்கணிக்கும் போக்கை மத்திய அரசு தொடர்ந்து செய்கிறது. உலக வங்கி போன்ற இடங்களில் கடன் வாங்க கூட மத்திய அரசு அனுமதியளிக்க மறுக்கிறது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி குறித்து தவறாக பேசுகிறார். வழக்கமாக இயற்கை பேரிடர் ஏற்பட்டால் வழங்கும் நிதியை மட்டுமே கொடுத்துள்ளனரே தவிர டிசம்பரில் ஏற்பட்ட புயல், மழை, வெள்ள நிவாரத்திற்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us