பி.ஐ.எஸ்., சான்றில்லா பொருட்கள் விற்ற அமேசான், பிளிப்கார்ட் மீது விரைவில் வழக்கு
பி.ஐ.எஸ்., சான்றில்லா பொருட்கள் விற்ற அமேசான், பிளிப்கார்ட் மீது விரைவில் வழக்கு
பி.ஐ.எஸ்., சான்றில்லா பொருட்கள் விற்ற அமேசான், பிளிப்கார்ட் மீது விரைவில் வழக்கு

3,376 பொருட்கள்
அவர்கள் திடீர் சோதனை நடத்தினர். அங்கு சான்றளிக்கப்படாத மின்விசிறிகள், பொம்மைகள், தண்ணீர் பாட்டில்கள் என 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3,376 பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து, பி.ஐ.எஸ்., சென்னை கிளைத் தலைவர் பவானி கூறியதாவது:
நுகர்வோர் வாங்கும் பொருட்கள், தரமானதாக இருக்க வேண்டும். இதற்காக பி.ஐ.எஸ்., சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நுகர்வோர் பொருட்கள் வாங்கும்போது, தர நிர்ணயத்திற்கு வழங்கப்படும், ஐ.எஸ்.,ஐ, ஹால்மார்க், சி.ஆர்.எஸ்., போன்ற முத்திரைகள், முறையாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
13 இடங்களில் 'ரெய்டு'
அமேசான், பிளிப்கார்ட் என எந்த நிறுவனமும், சான்றளிக்கப்படாத மற்றும் முத்திரை இல்லாத பொருட்களை விற்பனை செய்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அடிப்படையில், அந்த நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உள்ளோம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், இந்திய தர நிர்ணய முத்திரை அவசியம்.