ADDED : ஜூன் 22, 2025 03:15 AM

தென்காசி மாவட்டம், கடையநல்லுார் அருகே இடைகாலில், அரசு பஸ்சின் அச்சு உடைந்து, பின் சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடியிருக்கின்றன. கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்டோர் காயமடைந்த நிலையில், ஓட்டுநரின் திறமையால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.
அரசு பஸ்களில் சக்கரங்கள் கழன்று ஓடுவதும், இருக்கைகள் உடைந்து வெளியில் விழுவதும், அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.
தி.மு.க., அரசு எப்படி அச்சாணி இல்லாமல் இயங்குகிறதோ, அதுபோலவே, அரசு பஸ்களும் எந்த பிணைப்பும் இல்லாமல் ஓடுகின்றன.
ஒவ்வொரு விபத்து நடக்கும்போதும் ஓட்டுநரையோ, நடத்துநரையோ, தொழில்நுட்பப் பணியாளரையோ பணியிடை நீக்கம் செய்து, கடமையை முடித்துக் கொள்கிறது, தி.மு.க., அரசு.
விபத்துகளை ஏற்படுத்தும் பஸ்களும், தமிழகத்தை சீரழிக்கும் தி.மு.க., அரசும் மாற்றப்பட வேண்டும். இதுதான் எளிதான தீர்வு.
அன்புமணி
தலைவர், பா.ம.க.,


