ADDED : ஜூலை 06, 2025 06:19 AM

அ நிறம் | அளவு
மதுரை: நெல்லை பாளை., மறைமாவட்ட ஆயர் மற்றும் மதுரை உயர் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலராக இருந்தவர் அந்தோணிசாமி சவரி முத்து.
அவரை மதுரை உயர் மறை மாவட்டத்தின் புதிய பிஷப்பாக கத்தோலிக்க திருச்சபையின் உலகளாவிய தலைவர் போப் 14ம் லியோ நேற்று நியமித்தார். பொறுப்பேற்ற அந்தோணிசாமி சவரி முத்து மதுரை உயர்மறை மாவட்டத்தின் ஏழாவது பிஷப்.





