Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல் : 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல் : 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல் : 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல் : 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

ADDED : மார் 26, 2025 08:30 PM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னையில் யுடியூபர் சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வாடகைக்கு குடியிருக்கும், 'யு டியூபர்' சவுக்கு சங்கர் வீட்டை, நேற்று முன்தினம்( மார்ச் 24) ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் மலத்தைக் கரைத்து தெளித்து அசிங்கப்படுத்தினர். அப்போது வீட்டில், சங்கரின், 68 வயதான தாய் கமலா இருந்தார். இச்சம்பவம் குறித்து, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில், அவர் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டு உள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் இருப்பதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., சசிதரன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உட்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us