Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உங்கள் மகன் கற்கலாம், ஏழை எளிய பிள்ளைகள் கற்கக்கூடாதா; அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

உங்கள் மகன் கற்கலாம், ஏழை எளிய பிள்ளைகள் கற்கக்கூடாதா; அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

உங்கள் மகன் கற்கலாம், ஏழை எளிய பிள்ளைகள் கற்கக்கூடாதா; அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

உங்கள் மகன் கற்கலாம், ஏழை எளிய பிள்ளைகள் கற்கக்கூடாதா; அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

Latest Tamil News
சென்னை; உங்கள் மகன் மும்மொழி கற்கலாம், ஏழை எளியோரின் பிள்ளைகள், மும்மொழிகள் கற்கக் கூடாது என்று தடுக்கிறீர்களே? என்ன நியாயம் இது? என்று அமைச்சர் மகேஷ்க்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் தமது எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில், 'அறிவியல் மொழிதான் எங்களின் மூன்றாவது மொழி, தமிழகத்தின் கல்வி முறைதான், இந்திய கல்வி முறைக்கே தாயாக உள்ளது' என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவரை இந்த பதிவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து, அதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது:

6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் (ICT) பாடத்தினைக் கற்றுக் கொடுக்க, மத்திய அரசு வழங்கிய நிதியை ஏப்பம் விட்டுவிட்டு, வாட்சப்பில் வருவதை எல்லாம் பேச வெட்கமாக இல்லையா உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரே?

அண்டை மாநிலமான கேரளாவில், ICT பாடத்திட்டம் தமிழ் உட்பட மும்மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வெறும் வாய்ப் பேச்சு மட்டும் தான், செயலில் ஒன்றும் இல்லை.

உங்க மகன் மட்டும் மும்மொழிகள் கற்கலாம், ஆனால் ஏழை எளியோரின் பிள்ளைகள், மும்மொழிகள் கற்கக் கூடாது என்று தடுக்கிறீர்களே? என்ன நியாயம் இது?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us