Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்குங்க; இ.பி.எஸ்., வலியுறுத்தல்

தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்குங்க; இ.பி.எஸ்., வலியுறுத்தல்

தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்குங்க; இ.பி.எஸ்., வலியுறுத்தல்

தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்குங்க; இ.பி.எஸ்., வலியுறுத்தல்

ADDED : மார் 16, 2025 02:08 PM


Google News
Latest Tamil News
சென்னை: தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்விற்கு, தெலுங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்ப்பட்டதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலுங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

1000 கி.மீ. க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும். மேலும், இது போன்ற குளறுபடிகள் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணர வேண்டும்.

எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழக தேர்வர்களுக்கான மையங்களை தமிழகத்திலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us