Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ அஜித்குமார் கொலை வழக்கு; போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்ப

அஜித்குமார் கொலை வழக்கு; போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்ப

அஜித்குமார் கொலை வழக்கு; போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்ப

அஜித்குமார் கொலை வழக்கு; போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்ப

UPDATED : ஜூலை 03, 2025 04:48 PMADDED : ஜூலை 03, 2025 07:15 AM


Google News
Latest Tamil News
சென்னை: சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

திருப்புவனத்தில், நகைகள் திருடுபோன புகாரின் பேரில் அஜித்குமார் என்ற வாலிபர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்த விவகாரம், தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. இதில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், போலீசாரையும், தமிழக அரசையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையடுத்து, சிவகங்கை போலீஸ் எஸ்.பி.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், மானாமதுரை டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்தும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்தும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், திருப்புவனம் போலீஸ் நிலையம் முன்பு இருந்த சி.சி.டி.வி., காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, அஜித்குமாரை போலீசார் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவில் பணியாளரான சக்தீஸ்வரன், காவலர்கள் அஜித்குமாரை தாக்கிய வீடியோவை நீதிமன்றத்தில் ஆதாரமாக பதிவு செய்தார். இது வழக்கின் விசாரணைக்கு முக்கிய சாட்சியமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அஜித் குமாரை போலீசார் தாக்கிய வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டி.ஜி.பி.,க்கு இமெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளார். ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், தன்னை மிரட்டிய நிலையில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us