கோட்டை விட்டது அதிமுக: கொடி பிடித்தது மார்க்சிஸ்ட்: மதுரையில் ஆளுங்கட்சி 'டென்ஷன்'
கோட்டை விட்டது அதிமுக: கொடி பிடித்தது மார்க்சிஸ்ட்: மதுரையில் ஆளுங்கட்சி 'டென்ஷன்'
கோட்டை விட்டது அதிமுக: கொடி பிடித்தது மார்க்சிஸ்ட்: மதுரையில் ஆளுங்கட்சி 'டென்ஷன்'

அமைச்சர் தொகுதி முன்னிலை
மாநகராட்சியின் 5 மண்டலங்களில் அமைச்சர் தியாகராஜன் தொகுதியான மத்திய தொகுதியில் உள்ள மண்டலம் 3ல் தான் அதிக முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போதைய கமிஷனர் சித்ரா அனுமதியுடன் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை ஆய்வு செய்ததில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கின. உடனே அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் (பொறுப்பு) ரங்கராஜன், தற்போதைய உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், புரோக்கர்கள் என 8 பேரை கைது செய்துள்ளனர்.
55 பேர் பட்டியல் தயார்
கைதானவர்களிடம் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி நடத்திய விசாரணையில், 100 வார்டுகளிலும் சில மண்டல தலைவர்கள், தி.மு.க., பிரமுகர்கள், மாநகராட்சி அலுவலர்கள், புரோக்கர்கள் என மொத்தம் 55 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. விசாரணையை மேலும் தொடர்ந்தால் தேர்தல் நேரத்தில் தி.மு.க.,விற்கு கடும் நெருக்கடி உருவாகும் என்பதால் அடுத்த விசாரணைக்காக ஆளுங்கட்சி தலைமையின் சிக்னலுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
தி.மு.க.,வுக்கு நெருக்கடி
இந்த விவகாரத்தை சாதாரணமாக கடந்து சென்றால் தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்க முடியாது. நடவடிக்கை எடுத்தால் தி.மு.க.,வினர் பலர் சிக்கி, கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் தி.மு.க., தலைமைக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.