Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ அ.தி.மு.க., பிரமுகர் கொலை இருவருக்கு இரட்டை ஆயுள்

அ.தி.மு.க., பிரமுகர் கொலை இருவருக்கு இரட்டை ஆயுள்

அ.தி.மு.க., பிரமுகர் கொலை இருவருக்கு இரட்டை ஆயுள்

அ.தி.மு.க., பிரமுகர் கொலை இருவருக்கு இரட்டை ஆயுள்

ADDED : ஜூன் 14, 2025 06:17 AM


Google News
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அ.தி.மு.க., முன்னாள் நகர செயலர் கனகராஜ், 50. இவருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த பங்க் பாபு என்பவருக்கும், நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

கடந்த, 2017 பிப்., 12ல், நடைபயிற்சிக்காக கனகராஜ், ஸ்கூட்டியில் திருமஞ்சன கோபுர தெரு வழியாக சென்று கொண்டிருந்த போது, சரவணகுமார் என்பவர், ஸ்கூட்டி மீது மோதி நிலை தடுமாறி கனகராஜை கீழே விழ செய்தார்.

அந்த சமயத்தில் கனகராஜை, பங்க் பாபு, அவரது நண்பர் ராஜா இருவரும் அரிவாளால் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே கனகராஜ் இறந்தார்.

திருவண்ணாமலை டவுன் போலீசார், பங்க் பாபு, ராஜா, சரவணகுமாரை கைது செய்தனர். திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கை நீதிபதி மதுசூதனன் விசாரித்து, ராஜா, சரவணகுமார் ஆகிய இருவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

பங்க் பாபு 2018ல், ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us