Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மோசடி வழக்கில் கைது அ.தி.மு.க., நிர்வாகி நீக்கம்

மோசடி வழக்கில் கைது அ.தி.மு.க., நிர்வாகி நீக்கம்

மோசடி வழக்கில் கைது அ.தி.மு.க., நிர்வாகி நீக்கம்

மோசடி வழக்கில் கைது அ.தி.மு.க., நிர்வாகி நீக்கம்

ADDED : ஜூன் 07, 2025 04:27 AM


Google News
சென்னை : மோசடி வழக்கில் கைதானதை தொடர்ந்து, அ.தி.மு.க., தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட ஐ.டி., பிரிவு துணை செயலர் பிரசாத், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க.,வின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால், தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலர் பிரசாத், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்' என கூறியுள்ளார்.

அரசு வேலை வாங்கி தருவதாக, பணம் வாங்கி மோசடி செய்ததாக பிரசாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீக்கி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us