விவசாயிகள் கோரிக்கைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்: வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி விளக்கம்
விவசாயிகள் கோரிக்கைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்: வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி விளக்கம்
விவசாயிகள் கோரிக்கைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்: வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி விளக்கம்

வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பின், அவர் அளித்த பேட்டி:
வேளாண் துறை தனி பட்ஜெட்டிற்கு, 2021 - 22ம் ஆண்டு, 34,221 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது, 2025 - 26ம் ஆண்டில், 45,661 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வேளாண் துறைக்கு அதிகபட்சமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
செவ்வந்தி சாகுபடி
அகில இந்திய அளவில் கேழ்வரகு சாகுபடியில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மக்காச்சோளம், எண்ணெய் வித்துகள், கரும்பு, மரவள்ளி, புளி, மல்லிகை, கிராம்பு, கறிவேப்பிலை, ஜாதிக்காய், மஞ்சள், செவ்வந்தி சாகுபடியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நிலக்கடலை, சிறுதானியங்கள், தேங்காய் உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் இருக்கிறோம். இது, ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும்.
சேவை மையம்
காலநிலை மாற்றத்தை சமாளித்து, சாகுபடி செய்வதற்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக, 5,000 சிறிய பால் பண்ணைகள் அமைக்க, விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பனை வளர்ப்பு
டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு குறுவை தொகுப்பு, இயற்கை வேளாண் இடுபொருட்கள் விற்பனை, கோடை உழவு மானியம், சிறிய வேளாண் இயந்திரங்கள் மானியம் உள்ளிட்ட, விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் திட்டங்களாக வடிவம் பெற்றுள்ளன. விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை அறிவித்துள்ளோம்.