Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அமலாக்க அதிகாரி ஜாமின் மனு ஒத்திவைப்பு

அமலாக்க அதிகாரி ஜாமின் மனு ஒத்திவைப்பு

அமலாக்க அதிகாரி ஜாமின் மனு ஒத்திவைப்பு

அமலாக்க அதிகாரி ஜாமின் மனு ஒத்திவைப்பு

ADDED : பிப் 06, 2024 03:24 AM


Google News
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி ஜாமின் மனு மீதான விசாரணையை இன்றைக்கு (பிப்., 6) தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா ஒத்திவைத்தார்.

டாக்டர் சுரேஷ்பாபுவை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி அங்கித்திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கடந்தாண்டு டிச., 1ல் கைது செய்யப்பட்டார்.

மதுரை சிறையில் உள்ள நிலையில் அவர் ஜாமின் கோரி வழக்கறிஞர் செல்வம் மூலம் ஜன.,30ல் 2வது முறையாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

மனு மீதான முதற்கட்ட விசாரணை பிப்., 1ல் நடந்தது. நேற்று தலைமை குற்றவியல் நடுவர் மோகனா முன் மீண்டும் இம்மனு விசாரணைக்கு வந்தது.

அங்கித் திவாரி தரப்பில் வழக்கறிஞர்கள் செல்வம், காந்தி ஆகியோர், '60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் விடுவிக்க வேண்டும்,'' என்றனர்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தீர்ப்பு நகல்களையும் அவர்கள் தாக்கல் செய்தனர். லஞ்ச ஒழிப்பு தரப்பில் அனுராதா ஆஜரானார்.

இம்மனு மீதான விசாரணையை இன்றைக்கு (பிப்.,6 ) தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஒத்திவைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us