Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வாழப்பாடி அருகே நில தகராறில் விவசாயி கல்லால் அடித்து கொலை

வாழப்பாடி அருகே நில தகராறில் விவசாயி கல்லால் அடித்து கொலை

வாழப்பாடி அருகே நில தகராறில் விவசாயி கல்லால் அடித்து கொலை

வாழப்பாடி அருகே நில தகராறில் விவசாயி கல்லால் அடித்து கொலை

UPDATED : ஜன 28, 2024 10:32 PMADDED : ஜன 28, 2024 07:07 PM


Google News
Latest Tamil News
வாழப்பாடி:வாழப்பாடி அருகே நில தகராறில் விவசாயி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பி.கண்ணுகாரனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா, 59. விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன், 48. என்பவருக்கும் நில பிரச்சினை காரணமாக , இன்று மாலை 4:30 மணியளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் கீழே கிடந்த கல்லை எடுத்து ராஜா மீது வீசியுள்ளார். அப்போது, ராஜா நெற்றியில் கல் அடித்து, ராஜா கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா உறவினர்கள், ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராஜா உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வாழப்பாடி போலீசார், ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஈஸ்வரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராஜாவிற்கு மாதம்மாள் என்ற மனைவியும், திருமணமான நிலையில் இரண்டு மகன்களும் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us