குதிரை பேரம் நடத்துவதற்கான வாய்ப்பு: திருமாவளவன் பேட்டி
குதிரை பேரம் நடத்துவதற்கான வாய்ப்பு: திருமாவளவன் பேட்டி
குதிரை பேரம் நடத்துவதற்கான வாய்ப்பு: திருமாவளவன் பேட்டி
ADDED : ஜூன் 04, 2024 04:27 PM

சென்னை: 'குதிரை பேரம் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இது கவலை அளிக்கிறது' என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: தனி பெரும்பான்மை பெற முடியாத நிலை பா.ஜ.,வுக்கு ஏற்பட்டு உள்ளது. இது பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ள பெரிய பின்னடைவு. மோடி அலை வட இந்தியாவில் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. மோடி அலை என்பது மாயை. இண்டியா கூட்டணி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. மாபெரும் வெற்றியை பெற்று இருக்கிறது. இன்னும் பல சுற்றுகள் எண்ணி முடிக்கும் நிலை இருக்கிறது. ஆகவே இதை வைத்து மட்டும் ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது.
பாதிக்கு பாதி இழப்பு
இண்டியா கூட்டணி பெரும்பான்மையை பெற்று ஆட்சியை அமைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. வழக்கமாக உத்தரபிரதேசத்தை வைத்து தான் அரசியல் காய் நகர்த்தப்படும். உத்தரபிரதேசத்தில் பா.ஜ., பெரிய வெற்றியை பெறும் என சிலர் நம்பி கொண்டிருந்தனர். ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்தது வெற்றி பெறவில்லை. உத்தரபிரதேசத்திலேயே பாதிக்கு பாதி இடங்களை அவர்களால் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குதிரை பேரம் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.