பயங்கரவாத ஆதரவாளர் வழக்கு 4 சாட்சிகளிடம் விசாரணை
பயங்கரவாத ஆதரவாளர் வழக்கு 4 சாட்சிகளிடம் விசாரணை
பயங்கரவாத ஆதரவாளர் வழக்கு 4 சாட்சிகளிடம் விசாரணை
ADDED : ஜூலை 02, 2025 06:35 AM
ராமநாதபுரம் : இந்திய ராணுவ ரகசியங்களை திருட பாகிஸ்தான், இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த மலேசியாவை சேர்ந்தவர் மீதான வழக்கில் நேற்று நான்கு சாட்களிடம் விசாரணை செய்யப்பட்டது. வழக்கு இன்று( ஜூன் 2)தொடர்ந்து விசாரிக்கப்படும் எனதள்ளி வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் மேற்கு தெருவை சேர்ந்தவர் சித்திகலைஹா 52. இவரது அக்காவின் கணவர் மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல் ரஷீத் 58, இவர் மலேசியாவில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவர் ஓட்டலில் வேலை பார்த்த இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த முகமது யாசீர் 40, இவரது மனைவி பாரிகா ரிஸ்மியா 35, ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இவர்கள் என்மனங்கொண்டான் பகுதியில் சித்திகலைஹா வீட்டில் 2015 முதல் 2021 வரை தங்கியிருந்தனர்.
முகமதுயாசீர் தம்பி என்றும், பாரிகா ரிஸ்மியா மருமகள் எனவும் பொய்யான தகவல்களை தெரிவித்து சித்தி கலைஹா தனது ரேஷன் கார்டில் சேர்த்துள்ளார். இவர்களுக்கு ஆதார் கார்டு பெற்று தந்துள்ளார். இந்த போலி ஆதார் கார்டு மூலம் இரண்டு சிம்கார்டுகளை முகமது யாசிர் பெற்று பாகிஸ்தான் நபரான ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் தொடர்புள்ள முகமது மிப்லால் மவுலவி என்பவரிடம் கொடுத்துள்ளார்.
அந்த சிம்கார்டுகளை பயன்படுத்தி முகமது மிப்லால் மவுலவி இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமான ஆர்மி பப்ளிக் ஸ்கூல் என்ற லோகோவை பயன்படுத்தி ராணுவ அதிகாரிகளின் அலைபேசிக்கு மால்வேர் அட்டாக் மூலம் ராணுவ ரகசியங்களை திருடி வந்துள்ளனர். அலைபேசிகளை ேஹக் செய்து அதில் உள்ள தகவல்களை அழித்துள்ளனர்.
கியூ பிரிவு போலீசார் 2021 ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்திகலைஹா, முகமது மிப்லால் மவுலவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். முகமது மிப்லால் மவுலவி மட்டும் தலைமறைவானார். மற்ற நான்கு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் வந்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சித்திகலைஹா, முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல் ரஷீத் ஆகியோர் ஆஜராகினர்.
அரசு தரப்பு சாட்சியங்களான வழக்கின் புகார்தாரரான அப்போதைய கியூ பிரிவு எஸ்.ஐ.,யும், தற்போதைய சிவகங்கை மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டருமான வெங்கடேச பெருமாள், வி.ஏ.ஓ.,க்கள் புவனேஷ்வரன், செல்வம், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிஜபருல்லா ஆகியோரிடம்அரசு மாவட்ட தலைமை வழக்கறிஞர் கார்த்திகேயன் விசாரணை செய்தார்.
இன்றும்(ஜூலை 2) விசாரணை தொடரும் என நீதிபதி மெஹபூப் அலிகான் உத்தரவிட்டார்.