Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/போதை பொருள் கடத்திய கேரளாவை சேர்ந்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

போதை பொருள் கடத்திய கேரளாவை சேர்ந்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

போதை பொருள் கடத்திய கேரளாவை சேர்ந்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

போதை பொருள் கடத்திய கேரளாவை சேர்ந்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ADDED : ஜன 12, 2024 08:43 PM


Google News
Latest Tamil News
கூடலூர்: கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு, போதை பொருள் கடத்தியது தொடர்பாக, கூடலூரில் கைது செய்யப்பட்ட, கேரளாவை சேர்ந்த 4 பேரை, தமிழக போலீசார் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் வழியாக, கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு, கடந்த அக்., 27ம், கடத்த முயன்ற, விலை உயர்ந்த 120 கிராம் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) போதை பொருளை தமிழக போலீசார், தமிழக - கர்நாடக எல்லையான முதுமலை கக்கநல்லா சோதனை சாவடியில், காருடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முனீர், 30, பசில்ஜமான், 26, சையத், 21, ஷாப்பாஸ், 26, ஆகியோரை கைது செய்து, கூடலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இவர்கள் நான்கு பேரையும் குண்டர் சட்டத்தின் கைது செய்ய, நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல், நீலகிரி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதனை ஏற்று, அவர்களை குண்டர் கைது செய்ய, கலெக்டர் அருணா உத்தரவிட்டார். கூடலூர் டி.எஸ்.பி. செல்வராஜ், நேற்று, கூடலூர் சிறையில் இருந்த நான்கு பேரிடம், குண்டர் சட்டத்துக்கான உத்தரவை வழங்கி, அவர்களை கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களை சிறையில் அடைக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us