Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி; சேலத்தில் சோகம்

சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி; சேலத்தில் சோகம்

சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி; சேலத்தில் சோகம்

சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி; சேலத்தில் சோகம்

ADDED : ஜூன் 07, 2025 06:47 PM


Google News
Latest Tamil News
சேலம்: சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து கர்நாடகா நோக்கி 7 பேருடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. வாழப்பாடி அருகே புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள பாலத்தின் இடதுபுற தடுப்பில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேரில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us