Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கட்டுமான தொழிலாளி மகள் படிப்புக்கு ரூ.3 லட்சம்

கட்டுமான தொழிலாளி மகள் படிப்புக்கு ரூ.3 லட்சம்

கட்டுமான தொழிலாளி மகள் படிப்புக்கு ரூ.3 லட்சம்

கட்டுமான தொழிலாளி மகள் படிப்புக்கு ரூ.3 லட்சம்

ADDED : ஜன 03, 2024 11:33 PM


Google News
சென்னை:திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி மகளின் உயர் படிப்புக்கு, 3 லட்சம் ரூபாயை, அரசு வழங்கியுள்ளது.

தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளி சரவணகுமார் மகள் நந்தினி. இவர் 2022 - 23ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வில், 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்தார்.

நந்தினியின் உயர் படிப்புக்கும், வாழ்வாதார செலவுகளுக்கும் 3 லட்சம் ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து, நந்தனிக்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர், நேற்று வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us