Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அரசு பள்ளிகளில் 3 நாள் துாய்மை பணி

அரசு பள்ளிகளில் 3 நாள் துாய்மை பணி

அரசு பள்ளிகளில் 3 நாள் துாய்மை பணி

அரசு பள்ளிகளில் 3 நாள் துாய்மை பணி

ADDED : ஜன 04, 2024 11:06 PM


Google News
சென்னை:அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் அனுப்பியுள்ள கடிதத்தின் விபரம்:

அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு பள்ளி வளாகத்துாய்மை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி, வரும், 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை, அனைத்து அரசு பள்ளிகளிலும், சிறப்பு துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us