Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை

Latest Tamil News
தூத்துக்குடி: கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலையூர் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் அருகே வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகதீஸ் என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்தனர். பின்னர், அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த சம்பவம் நடந்த அரைமணி நேரத்திற்குள் செண்பா நகர் 3வது தெருவைச் சேர்ந்த கஸ்தூரி எனபவர் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கஸ்தூரியையும், அவரது சகோதரர் செண்பகராஜ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர்.

இந்த சம்பவத்தில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செண்பகராஜ் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us