Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

UPDATED : மே 12, 2025 03:18 PMADDED : மே 12, 2025 12:13 PM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னையில் மின்சார ரயில் மோதி, கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே, மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் மொபைல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயற்சி செய்தனர். அப்போது ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் முகமது நபூல், சபீர் அகமது உயிரிழந்தது என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மொபைல்போன் பேசிக்கொண்டே மாணவர்கள் தண்டவாளத்தைக் கடந்த போது உயிரிழந்த சம்பவம், தண்டவாளத்தை கடப்பது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்த்துவதாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us