ADDED : ஜன 31, 2024 05:51 PM

சென்னை: ஜனவரி 16ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று(ஜன.,31) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 18 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.