Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ '30 அமைச்சருக்கு என்ன வேலை?': காடேஸ்வரா சுப்பிரமணியம்

'30 அமைச்சருக்கு என்ன வேலை?': காடேஸ்வரா சுப்பிரமணியம்

'30 அமைச்சருக்கு என்ன வேலை?': காடேஸ்வரா சுப்பிரமணியம்

'30 அமைச்சருக்கு என்ன வேலை?': காடேஸ்வரா சுப்பிரமணியம்

ADDED : ஜூலை 15, 2024 04:16 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பல்லடம்: ''ஒரு சட்டசபை தொகுதியில், 30 அமைச்சர்களுக்கு என்ன வேலை?'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம், ராயர்பாளையத்தில் நடந்த ஹிந்து முன்னணி ஊழியர் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடந்து வருகிறது. ஹிந்துக்களை இழிவுபடுத்துபவர்களை தான், நாம் மீண்டும் ஆட்சியில் அமர வைக்கிறோம். இந்நிலை மாற வேண்டும்.

ஒரு சட்டசபை தொகுதியில், 30 அமைச்சர்களுக்கு என்ன வேலை? கோடிக்கணக்கில் செலவழித்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ., சும்மாவா இருக்கப் போகிறார்? தேர்தலில் செலவு செய்த பணத்துக்காக மீண்டும் வருமானம் ஈட்டத்தான் பார்ப்பார்.

மக்கள் சரியானவர்களை தேர்ந்தெடுக்க, அவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டியது ஹிந்து முன்னணியின் பொறுப்பு.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us