ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் ஆயுதத்திற்கு தடை
ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் ஆயுதத்திற்கு தடை
ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் ஆயுதத்திற்கு தடை
ADDED : ஜூன் 02, 2024 11:19 PM
போடி : ஏழு கட்டமாக நடந்த லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதனையொட்டி வேட்பாளர்கள், முகவர்கள் ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அலைபேசி, தீப்பெட்டி, கூர்மையான ஆயுதங்கள், மை பேனா, உணவு பொட்டலங்கள், மது அருந்தி வருவதற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
இதனை தடுக்கும் வகையில் போலீசார் சோதனைகளுக்கு பின் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.