ADDED : ஜூன் 05, 2024 03:07 AM
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கை:
கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு, 4.50 லட்சம் ஓட்டுக்கள் அளித்து, அன்பையும், ஆதரவையும் அள்ளி தந்திருக்கும் கோவை மக்கள் அனைவருக்கும், தலைவணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன். கோவையின் புதிய எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள கணபதி ராஜ்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கோவை தொகுதிக்கு, அவர் மேற்கொள்ளும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் முழு ஆதரவு அளிப்பதோடு, தொடர்ந்து கோவை மக்கள் முன்னேற்றத்திற்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.