
சென்னை:தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காளராக, ஜெயசங்கர் பொறுப்பேற்றார்.
இவர், 2000ம் ஆண்டு, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் சேர்ந்தார். 25 ஆண்டு களாக, பல துறைகளில் பணியாற்றினார்.
மணிப்பூரில் தணிக்கை தலைமை கணக்காளராகவும், தமிழகத்தில் ஏ அண்டு இ, தலைமை கணக்காளராகவும் பணியாற்றினார்.
தற்போது முதன்மை தலைமை கணக்காளராக ( தணிக்கை -1) நேற்று பொறுப்பேற்றார்.