கடைகளை குறைக்க முடியாது; குடிகாரர்களை குறைக்க வேண்டும்: அமைச்சரின் "அற்புத ஐடியா"
கடைகளை குறைக்க முடியாது; குடிகாரர்களை குறைக்க வேண்டும்: அமைச்சரின் "அற்புத ஐடியா"
கடைகளை குறைக்க முடியாது; குடிகாரர்களை குறைக்க வேண்டும்: அமைச்சரின் "அற்புத ஐடியா"
ADDED : ஜூலை 11, 2024 05:05 PM

சென்னிமலை: 'டாஸ்மாக் கடைகளை குறைப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. குடிப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும்' என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, ஈரோட்டில் நிருபர்கள் சந்திப்பில் முத்துசாமி கூறியதாவது: கள்ளுக்கடை திறப்பது குறித்து எதுவும் தற்போது சொல்ல முடியாது. இது குறித்து ஆய்வு செய்து பல துறைகளில் பேசி முடிவெடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை குறைப்பது பற்றி தற்போது சொல்ல முடியாது. இதனை உடனடியாக செய்ய முடியாது. இதில் நடைமுறை சிக்கல் உள்ளது. இதற்கு மக்களை தயார் செய்ய வேண்டும். அதற்கான அணுகுமுறையை அரசு செய்து வருகிறது. குடிப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம்.
காலி மதுபாட்டில்
செப்டம்பர் மாதம் முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இது தான் முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரின் நோக்கம். சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. விக்கிரவாண்டி தேர்தலில் 63% ஓட்டுகள் திமுகவிற்கு கிடைக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு அதை விட கூடுதலாக ஓட்டுகள் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.