Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கள்ளச்சாராய விவகாரம்: கவர்னர் ரவியை சந்தித்தார் அண்ணாமலை

கள்ளச்சாராய விவகாரம்: கவர்னர் ரவியை சந்தித்தார் அண்ணாமலை

கள்ளச்சாராய விவகாரம்: கவர்னர் ரவியை சந்தித்தார் அண்ணாமலை

கள்ளச்சாராய விவகாரம்: கவர்னர் ரவியை சந்தித்தார் அண்ணாமலை

ADDED : ஜூன் 24, 2024 11:31 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பா.ஜ., மூத்த நிர்வாகிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று (ஜூன் 24) சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பா.ஜ., மூத்த நிர்வாகிகளுடன் கவர்னரை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.

அப்போது கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாலை வலியுறுத்தி உள்ளார். திமுக அரசு கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கவர்னர் ரவியிடம் அண்ணாமலை புகார் மனு அளித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us