Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

ADDED : ஜூன் 25, 2024 01:49 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த கார்மெண்ட்ஸ் தொழிலாளிக்கு ஆயுட்காலம் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜபாளையம் தாலுகா சோலைசேரியை சேர்ந்த அழகு சோலைமலை 39, கார்மெண்ட்ஸ் தொழிலாளி. இவர் 2021ல் பெற்றோர் இல்லாத 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்தார். சேத்துார் ரூரல் போலீசார் அழகு சோலைமலையை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் அழகு சோலைமலைக்கு ஆயுட்காலம் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us