Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 10 பயணிகள் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 10 பயணிகள் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 10 பயணிகள் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 10 பயணிகள் கைது

ADDED : ஜூன் 25, 2024 02:56 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள 12.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 பெண்கள் உட்பட 10 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.



துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்துவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இன்று (ஜூன் 25) துபாயில் இருந்து சென்னை வந்த 2 விமானங்களில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது 2 பெண் உட்பட 10 பயணிகளிடம் இருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள 12.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கத்தை கடத்தி வந்த பயணிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us