Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை கொடு தாயே: பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுதல்

ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை கொடு தாயே: பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுதல்

ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை கொடு தாயே: பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுதல்

ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை கொடு தாயே: பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுதல்

UPDATED : மார் 15, 2025 06:14 AMADDED : மார் 15, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
ஆனைமலை,:'எங்களை பணி நிரந்தரம் செய்ய ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தி கொடு தாயே' என, ஆனைமலை மாசாணியம்மனுக்கு 'வேண்டுதல் சீட்டு' வைத்து, பகுதிநேர ஆசிரியர்கள், நுாதனமாக வேண்டுதல் வைத்துள்ளனர்.

தமிழகம் முழுதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும், 16,549 பகுதிநேர ஆசிரியர்களுக்கு, மாதம், 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் எனக் கூறியிருந்தது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை.

கோவை, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நீதி வேண்டி பக்தர்கள் பிரார்த்தனையை, வேண்டுதல் சீட்டில் எழுதி, அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்டால், இரு வாரங்களுக்குள் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதையறிந்த பகுதிநேர ஆசிரியர்கள் சிலர், தங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டுமென, ஆனைமலை மாசாணியம்மனிடம், தமிழக முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நல்ல புத்தி, சிந்தனை கொடுத்து, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, 'வேண்டுதல் சீட்டு' எழுதி வைத்து வழிபட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us