ADDED : ஜூன் 08, 2024 03:40 PM
சென்னை: லோக்சபா தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பி.எஸ்., தோல்வியடைந்த நிலையில், ஓ.பி.எஸ்., அணியிலிருந்து விலகி கொள்கிறேன். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்படும் என சென்னையில் ஜே.சி.டி பிரபாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மேலும் அவர், '' நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. அதிமுக தொண்டர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்'' என தெரிவித்தார்.