Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ராணுவ ஓய்வூதியர் குறைதீர் மையமாக சென்னை தேர்வு

ராணுவ ஓய்வூதியர் குறைதீர் மையமாக சென்னை தேர்வு

ராணுவ ஓய்வூதியர் குறைதீர் மையமாக சென்னை தேர்வு

ராணுவ ஓய்வூதியர் குறைதீர் மையமாக சென்னை தேர்வு

ADDED : ஜூலை 10, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
சென்னை:ராணுவ அமைச்சகத்தின் குடும்ப ஓய்வூதிய குறைதீர் தலைமையிடமாக, சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களின் குடும்ப குறைதீர் மையம், மும்பை மற்றும் அலகாபாதில் செயல்பட்டு வந்தது. தற்போது, ஓய்வூதிய குறைதீர் தலைமையிடமாக, சென்னையில் உள்ள பாதுகாப்பு கணக்காளர் அலுவலகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இங்கு, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தங்களின் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.

சென்னையில் கடந்த 10 நாள்களில், 1,891 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 1,034 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களின் குறைதீர் சிறப்பு முகாம் இம்மாதம் முழுதும் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us