Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள்: இ.பி.எஸ்., கண்டனம்

திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள்: இ.பி.எஸ்., கண்டனம்

திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள்: இ.பி.எஸ்., கண்டனம்

திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள்: இ.பி.எஸ்., கண்டனம்

ADDED : ஜூலை 02, 2024 02:56 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தி.மு.க., ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகி உள்ளது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து, எக்ஸ் சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்னையால் ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது. சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.

எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்.,கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us