Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கூடங்குளத்தில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

கூடங்குளத்தில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

கூடங்குளத்தில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

கூடங்குளத்தில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

ADDED : ஜூன் 04, 2024 01:44 AM


Google News
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கடற்கரை கிராமம் இடிந்தகரை. கடந்த சில நாட்களாக, கடலில் அலைகள் ஆக்ரோஷமாக உள்ளன.

நேற்று காலை கவாஸ்கர் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் கவாஸ்கர், 50, சந்தியாகு, 60, செல்வன், 53, ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.

கரையில் இருந்து 750 மீட்டர் துாரத்தில் சென்றபோது, திடீரென ராட்சத அலை எழுந்தது; இதில் படகு கவிழ்ந்தது.

தத்தளித்த இரு மீனவர்களை சக நாட்டுப்படகு மீனவர்கள் மீட்டனர். செல்வம் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரைத் தேடும் பணி நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us