சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கொலை: நட்டா, ராகுல் கண்டனம்
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கொலை: நட்டா, ராகுல் கண்டனம்
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கொலை: நட்டா, ராகுல் கண்டனம்


மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்
இது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தி.மு.க., அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரால் கூட, பாதுகாப்பாக வாழ முடியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

கமல்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், ‛‛பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும்.
நட்டா கண்டனம்
பா.ஜ., தலைவர் நட்டா வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலையால், நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்ட வளர்ந்து வரும் தலைவரின் வாழ்க்கை கொடூரமாக குறைக்கப்பட்டது. அவரின் குடும்பத்தினரின் நினைவாக எனது எண்ணங்கள் உள்ளது. குற்றவாளிகளை தமிழக அரசு விரைவில் தண்டிக்க வேண்டும். ஏழை மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலை பிரிவு மக்களை தி.மு.க., காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது என்ற கூற்றை, இந்த கொலை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தான் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணி வெட்டி அரசியலில் ஈடுபடாமல், அவர்கள் மீது கருணை காட்டினால் நல்லது எனக்கூறியுள்ளார்.