சட்டசபை மானிய கோரிக்கை விவாதம்: ஆர்வம் காட்டாத எம்.எல்.ஏ.,க்கள்
சட்டசபை மானிய கோரிக்கை விவாதம்: ஆர்வம் காட்டாத எம்.எல்.ஏ.,க்கள்
சட்டசபை மானிய கோரிக்கை விவாதம்: ஆர்வம் காட்டாத எம்.எல்.ஏ.,க்கள்

பதிலுரை
அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பர். பின்னர் பதிலுரை வழங்கி, துறை தொடர்பாக புதிய திட்டங்களையும் அறிவிப்பர். முன்பெல்லாம் காலை 10:00 மணிக்கு சட்டசபை துவங்கி பிற்பகல் 3:00 மணிக்குள் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு, மூன்று துறைகளின் மீது மட்டுமே விவாதம் நடக்கும். ஆனால், 2021 மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், சட்டசபை நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
இருக்கைகள் காலி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் சபையை புறக்கணித்து வருகின்றனர். பா.ம.க., - பா.ஜ., - காங்., உள்ளிட்ட கட்சிகளின் சட்டசபை தலைவர்களும், சபை நிகழ்வுகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் வரிசை மட்டுமின்றி, ஆளுங்கட்சி வரிசையிலும் எம்.எல்.ஏ.,க்களின் இருக்கைகள் காலியாகின்றன. சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் இறுதியாக பதிலளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.