Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காரியாபட்டியில் தோப்பறை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு

காரியாபட்டியில் தோப்பறை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு

காரியாபட்டியில் தோப்பறை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு

காரியாபட்டியில் தோப்பறை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு

ADDED : மே 10, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
காரியாபட்டி: வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தின் போது நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் தண்ணீர் பீச்சுகின்றனர். இதற்காக தோல் பை (தோப்பறை) பயன்படுத்தப்படுகிறது.

காரியாபட்டி தொழிலாளர்கள் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதால், தேவையான நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கின்றனர்.

மதுரையில் சித்திரை மாதம் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மே 12ல் இறங்குகிறார்.

இதில் நேர்த்திக்கடனாக சிலர் முடி காணிக்கை, மாவிளக்கு, காவடி, பாதயாத்திரை என செலுத்தி வருகின்றனர்.

அதில் சிலர் தண்ணீர் பீச்சி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதற்காக தோல் பை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் காரியாபட்டியில் 100க்கு மேற்பட்ட குடும்பத்தினர் தோல் பை என்னும் தோப்பறை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் விரதம் இருந்து, பாரம்பரியமாக இத்தொழிலை செய்து வருகின்றனர்.

உற்பத்தி செய்வதற்கான அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அரசு தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

சுந்தரம், தோல் உற்பத்தியாளர்: கள்ளழகருக்காக தோல் பை எனும் தோப்பறை செய்து வரும் பணிகளில் பாரம்பரியமாக 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகிறோம். ஒரு தோல் ரூ.100 வாங்கப்படுகிறது. இதனை திண்டுக்கல்லில் உள்ள தொழிற்சாலையில் பக்குவப்படுத்த ரூ.600 செலவாகிறது. தோல் பை செய்ய கூலி ரூ.300 ஆகிறது. மொத்தம் ரூ.ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு தோப்பறையின விலை ரூ. 600 முதல் 800 வரை தான் விற்பனையாகிறது.

கள்ளழகர் இறங்குவதற்கு 5 நாட்களுக்கு முன் மதுரையில் தங்கி விற்பனை செய்து வருகிறோம். இதற்காக ஆகும் செலவு அதிகம் என்பதால் நஷ்டம் ஏற்படுகிறது.

இருந்தாலும் சுவாமிக்காக நஷ்டத்தை தாங்கிக் கொண்டு பாரம்பரியமாக தொழிலை செய்து வருகிறோம். அரசு அடிப்படை வசதிகளை செய்து, சலுகைகள் வழங்கி இத் தொழிலை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us