Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குழாய் உடைந்து ஓடும் குடிநீர்

குழாய் உடைந்து ஓடும் குடிநீர்

குழாய் உடைந்து ஓடும் குடிநீர்

குழாய் உடைந்து ஓடும் குடிநீர்

ADDED : ஜூன் 14, 2025 12:08 AM


Google News
Latest Tamil News
சிவகாசி: சிவகாசி காந்திநகர் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து ஆயில் மில் காலனி, ரயில்வே பீடர் ரோடு, தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியாகம் செய்யப்படுகின்றது.

இந்நிலையில் ரயில்வே பீடர் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் ஆறாகப் பெருக்கெடுத்து வீணாக வெளியேறி அருகில் உள்ள ஓடையில் கலந்தது. கோடை வெயில் கொளுத்தும் நிலையில் மக்களுக்கு தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.

மேலும் இப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். குழாய் உடைந்த இடத்தில் ரோடும் சேதம் அடைந்துள்ளதாலும், ரோட்டில் ஓடும் தண்ணீராலும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதம் அடைந்த குழாயினை சரி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us