ADDED : செப் 20, 2025 03:38 AM

விருதுநகர்: ஓய்வூதியர்களின் 25 மாத நிலுவைகளை வழங்குவது, இறந்தோரின் வாரிசுகளுக்கு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் 33வது நாள் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
பொதுச்செயலாளர் வெள்ளைத்துரை தலைமை வகித்தார்.
சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தர ராசன் பேசினார். மாவட்டத் தலைவர்கள் தேவா, மகாலட்சுமி, ஓய்வூதியர் நல அமைப்பு மண்டல செயலாளர் போஸ், காத்தப்பன், மத்திய சங்க தலைவர் திருப்பதிபங்கேற்றனர்.