Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திறக்கப்படாத திருமண மண்டபம், வாரச்சந்தையால் சிரமம்

திறக்கப்படாத திருமண மண்டபம், வாரச்சந்தையால் சிரமம்

திறக்கப்படாத திருமண மண்டபம், வாரச்சந்தையால் சிரமம்

திறக்கப்படாத திருமண மண்டபம், வாரச்சந்தையால் சிரமம்

ADDED : ஜூன் 21, 2025 11:52 PM


Google News
காரியாபட்டி: திறக்கப்படாத திருமண மண்டபத்தால் விசேஷங்கள் வைக்க முடியாமல் சிரமப்படும் மக்கள், வாரச்சந்தையால் போக்குவரத்துக்கு இடையூறு, ஊருணியில் அமைக்கப்பட்ட நடைபாதை சேதமடைந்து வருவது உள்ளிட்ட காரணங்களால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

மல்லாங்கிணர் பேரூராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தோண்டப்பட்ட பள்ளம் சரிவர சீரமைக்கப்படாததால் வீதிகள் சேதமடைந்து, வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் இருந்து வருகிறது. ஒரு சில வீதிகளில் உள்ள குடிநீர் தொட்டி சரிவர செயல்படாமல் உள்ளது. சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சந்தை நடைபெற்று வருகிறது. காய்கறிகளை ரோட்டில் வைத்து விற்பனை செய்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மக்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்று பொருட்கள் வாங்குவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மந்தை ஊருணியில் புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதையை, இரவு நேரங்களில் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. புற்கள் முளைத்து விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறி வருகிறது.

பஜாரில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் படாதபாடு படுகின்றனர். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட திருமண மண்டபம் திறக்கப்படாமல் உள்ளது. விசேஷ நிகழ்ச்சிகள் நடத்த மக்கள் படாதபாடு படுகின்றனர். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடைபாதையை தூய்மைப்படுத்த வேண்டும்


வெள்ளைச்சாமி, விவசாயி: ஊருணியில் ரூ. பல லட்சம் செலவு செய்து நடைபாதை அமைக்கப்பட்டது. திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் யாரும் நடக்க முடியவில்லை. புதர் மண்டி விஷ பூச்சிகள் அடைந்து வருகிறது. திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தூய்மைப்படுத்தி, விளக்குகள் பொருத்தி, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

சந்தையால் இடையூறு


குமார், விவசாயி: சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சந்தை செயல்பட்டு வருகிறது. காய்கறிகளை ரோட்டில் போட்டு விற்பனை செய்வதால் பொருட்கள் வாங்க குறுக்கு நெடுக்குமாக மக்கள் நடந்து செல்லும் போது விபத்து நடக்கிறது. பொருட்கள் வாங்க வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர். போக்குவரத்திற்கு இடையூறு இன்றி, தனியாக இடம் ஒதுக்கி சந்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

செயல்படாத திருமண மண்டபம்


மணி, தனியார் ஊழியர்: ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக மூடப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்தும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. ஏழை எளிய மக்கள் விசேஷங்கள் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us