Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காரியாபட்டி பட்டாசு ஆலையில் விபத்து இருவர் பலி, மூவர் படுகாயம்

காரியாபட்டி பட்டாசு ஆலையில் விபத்து இருவர் பலி, மூவர் படுகாயம்

காரியாபட்டி பட்டாசு ஆலையில் விபத்து இருவர் பலி, மூவர் படுகாயம்

காரியாபட்டி பட்டாசு ஆலையில் விபத்து இருவர் பலி, மூவர் படுகாயம்

ADDED : ஜூன் 12, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வடகரையில் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில், சம்பவ இடத்திலே இருவர் பலியாகினர். மூவர் படுகாயம் அடைந்தனர்.

காரியாபட்டி வடகரையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கும் நாக்பூர் உரிமம் பெற்ற 30 அறைகளுடன் கூடிய பட்டாசு ஆலை உள்ளது.

நேற்று காலை 8:30 மணிக்கு பணியாளர்கள் பணியை துவக்கினர். மருந்து தயார் செய்யும் பணியில் தண்டியனேந்தலைச் சேர்ந்த கருப்பையா 38, கணேசன் 50, ஈடுபட்டிருந்தனர். மருந்தை எடுக்க, கல்குறிச்சியைச் சேர்ந்த சவுண்டம்மாள் 54, தண்டியனேந்தலைச் சேர்ந்த முருகன் 45, பேச்சியம்மாள் 40, மருந்து தயார் செய்யும் அறைக்கு வந்தனர். 9:00 மணிக்கு மருந்தில் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அறை முற்றிலும் சேதமடைந்து தரைமட்டமானது.

இதில் கருப்பையா, சவுண்டம்மாள் உடல் சிதறி சம்பவ இடத்திலே பலியாகினர். 2 கால்கள் துண்டான முருகன் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையிலும், கணேசன், பேச்சியம்மாள் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அறை சிதறியதில் வெளியில் நடமாடிய அச்சங்குளத்தைச் சேர்ந்த மாரியம்மாள், தோணுகாலைச் சேர்ந்த காமாட்சிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஒரு அறை மட்டும் தரைமட்டமானது. மற்ற அறைகள் தப்பின. அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., மதிவாணன் நேரில் பார்வையிட்டார். காரியாபட்டி தீயணைப்பு வீரர்கள் சிதறிய உடல்களை எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தோணுகாலைச் சேர்ந்த ஆலை மேலாளர் கனி முருகன், கல்குறிச்சியைச் சேர்ந்த போர்மேன் வீரசேகரனை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us