Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குப்பைத் தொட்டிகளாக மாறி வரும் டிரான்ஸ்பார்மர்கள்: தீயும் வைப்பதால் விபத்திற்கு வாய்ப்பு

 குப்பைத் தொட்டிகளாக மாறி வரும் டிரான்ஸ்பார்மர்கள்: தீயும் வைப்பதால் விபத்திற்கு வாய்ப்பு

 குப்பைத் தொட்டிகளாக மாறி வரும் டிரான்ஸ்பார்மர்கள்: தீயும் வைப்பதால் விபத்திற்கு வாய்ப்பு

 குப்பைத் தொட்டிகளாக மாறி வரும் டிரான்ஸ்பார்மர்கள்: தீயும் வைப்பதால் விபத்திற்கு வாய்ப்பு

ADDED : டிச 01, 2025 06:32 AM


Google News
சிவகாசி: சிவகாசியில் குப்பை தொட்டிகளாக மாறிவரும் டிரான்ஸ்பார்மர்கள் அருகே தீவைப்பதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகாசி மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிகள், போக்குவரத்து நிறைந்த ரோட்டோரங்களில் ஏராளமான டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. திறந்த வெளியில் டிரான்ஸ்பார்மர் இருந்தால் அதன் அருகே விபரீதம் அறியாமல் மக்கள் சென்றால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தெரியாமல் உரசினால் விபத்து அபாயம் ஏற்படும்.

இதனால் அனைத்து டிரான்ஸ்பார்மர்களைச் சுற்றிலும் பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை மக்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு தடுப்புகள் வெளியிலிருந்து பார்ப்பதற்கு குப்பை தொட்டி போல் காட்சியளிப்பதால் மக்கள், கடை உரிமையாளர்கள் தங்களது குப்பைகளை இதற்குள் போட்டு விடுகின்றனர். இதனை கண்டறிந்து அகற்றுவதற்கும் வழி இல்லை.

இதில் யாராவது தெரியாமல் தீ வைத்தால் டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் இது போல் டிரான்ஸ்பார்மர் அருகே கொட்டப்பட்ட குப்பைகளில் தீ வைத்து அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. எனவே டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us