ADDED : ஜூன் 08, 2025 05:46 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் ஜூன் 9, விருதுநகர் அரசு ஐ.டி.ஐ.,ல் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் நடக்கிறது. முகாமில் அரசு, பிரபல முன்னணி தனியார் தொழிற்நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் ஐ.டி.ஐ.,ல் உள்ள தொழிற்பிரிவுகளான பிட்டர், மெஷினிஸ்ட், எம்.எம்.வி., எலக்ட்ரிஷியன், டர்னர், வெல்டர், வயர்மேன், சர்வேயர், கோபா, ஆர்.அண்ட்.ஏ.சி., மற்றும இதர பிற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இது நாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்களும், 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் இம்முகாமில் பங்கேற்கலாம். மாதந்திர உதவித்தொகையாக ரூ.7,700- முதல் ரூ.13,500-வரை வழங்கப்படும், என்றார்.