Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குப்பைக்கு வைத்த தீயால் ஆம்புலன்ஸ் எரிந்து நாசம்

குப்பைக்கு வைத்த தீயால் ஆம்புலன்ஸ் எரிந்து நாசம்

குப்பைக்கு வைத்த தீயால் ஆம்புலன்ஸ் எரிந்து நாசம்

குப்பைக்கு வைத்த தீயால் ஆம்புலன்ஸ் எரிந்து நாசம்

ADDED : ஜூன் 07, 2025 01:08 AM


Google News
சேத்துார்: சேத்துார் அருகே பழுது நீக்குவதற்காக நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயில் எரிந்து சேதமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயக்குமாருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் சில மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கியது. பழுது நீக்குவதற்காக சேத்துார் மாலையம்மன் கோயில் அருகே ஒர்க் ஷாப்பில் நிறுத்தி இருந்தார்.

அதன் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் அடையாளம் தெரியாத நபர் வைத்துள்ளார். தீ பரவி அருகில் நிறுத்தப்பட்டிருந்த பழுதான ஆம்புலன்ஸில் பற்றி முழுவதும் எரிந்து சேதம் ஆனது. தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.

சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us