/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை பூங்காவாக மாற்றிய சப் இன்ஸ்பெக்டர் காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை பூங்காவாக மாற்றிய சப் இன்ஸ்பெக்டர்
காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை பூங்காவாக மாற்றிய சப் இன்ஸ்பெக்டர்
காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை பூங்காவாக மாற்றிய சப் இன்ஸ்பெக்டர்
காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை பூங்காவாக மாற்றிய சப் இன்ஸ்பெக்டர்

பூங்காவாக மாறிய போலீஸ் ஸ்டேஷன்
சுற்றுச் சுவர் இன்றி படுமோசமாக இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சுற்றுச் சுவர் எழுப்பி, பேவர் பிளாக் கற்கள் பதித்து, மூலிகைச் செடிகள், பூ செடிகள் வளர்த்து பூங்காவாக மாற்றினார். புகார் தர வருபவர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தினார். சுற்றுச்சுவர் முழுவதும் உலக பொதுமறையான திருக்குறள், தமிழ் பாரம்பரிய கலாச்சாரம், பண்பாடு, குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன், வண்ண ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தி, பார்ப்பவரின் கண்களுக்கு விருந்து படைத்தார்.
நுாலகம்
படித்த இளைஞர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி, அரசு தேர்வுகள் எழுத, படித்து பயன் பெற நூலகத்தை ஏற்படுத்தினார். பணி மட்டுமே கடமை என்று நினைக்காமல், மற்றவர்களுக்கு உதவுவதை கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். படிக்க வசதியில்லாதவர்களுக்கு படிப்பு செலவு, தனியாக கஷ்டப்படுபவர்களுக்கு வேண்டிய உதவிகள், ஆதரவின்றி இறந்தவர்களை அடக்கம் செய்வது உள்ளிட்ட சேவைகளையும் செய்து வருகிறார். இப்படி எண்ணற்ற சேவைகளை செய்து சாதிப்பதோடு, மற்றவர்களிடத்தில் அன்பாக, அரவணைப்புடன் நடந்து கொள்வார்.
பறவைகளுக்கும் நண்பர்
எளிமையான மனிதர். மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். கலெக்டர் ஜெயசீலன், சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவப்படுத்தினர். மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் உற்ற நண்பன் என்பதை காட்டும் வகையில், அங்குள்ள ஆலமரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பழம் தின்னி வவ்வால்களை காக்கும் பொருட்டு, அப்பகுதியில் வெடி வெடிக்க, மேளதாளங்கள் முழங்க, வாகனங்களில் அதிக சத்தம் எழுப்ப தடை விதித்தார் என்றால் இதைவிட சான்று வேறு என்ன இருக்க முடியும். எண்ணற்ற சாதனைக்கு சொந்தக்காரர் தற்போது விருதுநகரில் பணியாற்றி வருகிறார்.