Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருவண்ணாமலை கோயிலில் நாளை புரட்டாசி சனி உற்ஸவம் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்பு

திருவண்ணாமலை கோயிலில் நாளை புரட்டாசி சனி உற்ஸவம் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்பு

திருவண்ணாமலை கோயிலில் நாளை புரட்டாசி சனி உற்ஸவம் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்பு

திருவண்ணாமலை கோயிலில் நாளை புரட்டாசி சனி உற்ஸவம் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்பு

ADDED : செப் 19, 2025 01:50 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்ஸவம் நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்புடன் துவங்குகிறது.

இக்கோயிலில் புரட்டாசி சனி உற்ஸவம் நாளை செப். 20, செப். 27, அக். 4, அக்.11, அக்18 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இதனை முன்னிட்டு அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம், மதியம் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜை, இரவு 8:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது.

அக்.4 மூன்றாம் சனிக்கிழமை அன்று மட்டும் அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. உற்ஸவ நாட்களில் மாலை 4:00 மணிக்கு சீனிவாச பெருமாள் கிரிவலம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர். மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us