ADDED : ஜூன் 21, 2025 11:51 PM

சிவகாசி: சிவகாசி சிவன் கோயில் முன்பு அடுத்தடுத்து இரு இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் முழுவதும் வீணாகி சாக்கடையில் கலக்கிறது.
இதனால் கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குடிநீர் வீணாவதால் அப்பகுதி முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது. தவிர ரோடும் சேதம் அடைந்து வருகின்றது. எனவே உடனடியாக சேதம் அடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.