ரேஷன் கடை அவசியம்
பிரபு, தொழிலாளி: பட்டாபிராமர் கோயில் பகுதியில் அரசு நிலங்கள் உள்ளது. இதில் ரேஷன் கடையும், சமுதாய கூடமும் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடை இங்கு வந்தால் 2 வார்டு மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். நடவடிக்கை இல்லை.
பூங்கா வேண்டும்
மாணிக்கம், தொழிலாளி: பட்டாபிராமர் கோயில் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் நகராட்சி பூங்கா அமைத்தால் 3 வார்டு மக்களுக்கு பொழுதுபோக்க வசதியாக இருக்கும். அத்துடன் கோயில் பகுதி முழுவதும் தூய்மையாக இருக்கும். நகராட்சி நிர்வாகம் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாறுகால் வசதி இல்லை
தாமரைச்செல்வி, குடும்ப தலைவி: பட்டாபிராமர் கோயில் பகுதியில் உள்ள தெருக்களில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வாறுகால்கள் சேதமடைந்து கழிவுநீர் முறையாக செல்லாமலும் உள்ளது. மழைக்காலத்தில் வாறுகால்கள் நிறைந்து மழை நீரும் கழிவு நீரும் கலந்து தெருவில் ஓடுகிறது. இந்த பகுதியில் அகலமாக வாறுகால் அமைத்தும், ரோட்டை உயர்த்தி அமைக்க வேண்டும்.